×

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

சேலம், நவ.22: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் இன்று (22ம் தேதி) முகூர்த்தக்கால் நடும் விழா நடக்கிறது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டையொட்டி, கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை, வைகாசி விசாக தேரோட்டம், நவராத்திரி விழா, தீபாவளி பண்டிகை, வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு உள்ளிட்ட விழாக்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி டிசம்பர் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று (22ம் தேதி) காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் முகூர்த்தக்கால் நடும் விழா நடக்கிறது. இரவு 7 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றுதல் மற்றும் சுவாமி புறப்பாடு நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags : festivals ,Vaikuntha Ekadasi ,Perumal Temple ,
× RELATED நித்யகல்யாண பெருமாள் கோயிலுக்கு...